Latestமலேசியா

எரிபொருள் பம்ப் பிரச்சனை காரணமாக 87,000க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறும் ஹோண்டா

கோலாலம்பூர், ஜூன்-10 – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிபொருள் பம்புகளை மாற்றுவதற்காக ஹோண்டா மலேசியா தனது 87,490 வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

“எரிபொருளில் நீண்ட நேரம் ஊறியப் பிறகு எரிபொருள் பம்ப் விரிவடையக்கூடும், இதனால் வாகனம் இயக்கப்படுவதைத் அது தடுக்கலாம் அல்லது வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் இயந்திரம் நின்றுவிடலாம்“ என ஹொண்டா நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இப்பிரச்னையில் Jazz, City, Civic, Accord, BR-V, HR-V, CR-V dan Odyssey ஆகிய மொத்தம் 84,073 வாகனங்கள்
சம்பந்தப்பட்டுள்ளன.

எஞ்சிய 3,417 வாகனங்கள், உயர் அழுத்த எரிபொருள் பம்பின் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன;
நீண்ட நேரம் பயன்படுத்துதல் மற்றும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக இது விரிசலையோ அல்லது எரிபொருள் கசிவையோ ஏற்படுத்தலாம்; அதோடு வாகனம் ஓட்டும்போதோ அல்லது செயலற்ற நிலையில் இருக்கும்போதோ பெட்ரோல் வாசனையை வெளியேற்றலாம்.

இந்த உயர் அழுத்த எரிபொருள் பம்ப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவை 2023 – 2024 ஆண்டுகளில் வெளியான Civiv மற்றும் 2024-ல் வெளியான CR-V மாடல்களாகும்.

பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என்றும், அதில் திரும்பப் பெறுதல் விவரங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.

Honda Touch செயலி வாயிலாகவும் அவர்கள் அதை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!