Latest

கம்போங் சுங்கை பாருவில் கலவரம்; டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவரின் தலையில் காயம் 3 பேர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 11: இன்று, கம்போங் சுங்கை பாருவில் 37 வீடுகளை காலி செய்யும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட கலவரத்தில் மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்தச் சம்பவத்தில், டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுலிஸ்மி அபெண்டி சுலைமானின் (Sulizmie Affendy Sulaiman) தலையில் காயம் ஏற்பட்டது என்று தேசிய காவல் துறைத் தலைவர் கலித் இஸ்மாயில் (Khalid Ismail)தெரிவித்தார்.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி 37 வீடுகளை காலி செய்யும் நோக்கில்தான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் பாடில் மாசுஸ் (Fadil Marsus) விளக்கமளித்தார்.

பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபடாமல், உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் உள்துறை அமைச்சர் சயிபுத்தீன் நசுடீன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) இருவரும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பிரதமர் உடனடி விசாரணையை தொடங்க வேண்டுமென்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!