Latestஉலகம்

காசா போர்நிறுத்தம் நீடிக்கும் – டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன், அக்டோபர் -29,

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருந்தாலும், காசாவில் போர்நிறுத்தம் (ceasefire) இன்னும் நடைமுறையில் உள்ளதென்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

ஜப்பானில் இருந்து தென் கொரியாவுக்குப் புறப்பட்ட விமானப் பயணத்தின் போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், போர்நிறுத்தம் தொடருமென்றும் ‘ஹமாஸ்’ உடன்பாட்டை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஹமாஸ் என்பது மேற்கு ஆசிய அமைதிப் பணியின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மறுபுறம், ஹமாஸ் அமைப்பு, ரஃபாவில் நடந்த தாக்குதலில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்றும், போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு தாங்கள் முழுமையாக உடன்பட்டுள்ளோம் என்றும் அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம், அதிபர் டிரம்ப் ஆசியாவில் மேற்கொண்ட தூதரகப் பயணத்தின் போது நடந்துள்ளது. அவர் அப்பயணத்தில் ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!