
அங்காரா, ஏப்ரல் 23- பிலிப்பைன்ஸிலுள்ள பேக்கரி தொழிலாளி ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை, அதிகாலையில் தனது 7 சக ஊழியர்களைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதல் மணிலா ரிசால் மாகாணத்திலுள்ள ஆன்டிபோலோ நகரில் நடந்ததாக அறியப்படுகின்றது.
அந்த ஆடவன் இந்த கொலைகளை தான் தான் செய்ததாக போலிசிடம் ஒப்புக் கொண்டதோடு, அந்த 7 பேரும் தன்னைக் கொல்ல சதி செய்திருந்ததால், இவ்வாறு செய்து விட்டதாக கூறியுள்ளான்.
இதனிடையே தற்போது அதிகாரிகள் அக்கொலையாளியின் மன ஆரோக்கியத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.