
பாரிட் புந்தார், மே-11 – பேராக், பாரீட் புந்தார் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு போட்டி, மே 10 சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது.
அதனை பேராக் லெஜெண்டரி ரைடர்ஸ் தலைவர் மேஜர் புனிதன் சந்திரசேகர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதோடு அவர்களை விளையாட்டு துறையில் மேலோங்கச் செய்யும் வகையில் இப்போட்டி எற்பாடு செய்யப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகத்தை அவர் பாராட்டினார்.
இவ்வேளையில், அந்நிகழ்வின் ஒரு பகுதியாக நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான வணக்கம் மலேசியா ஆதரவுடன் லெஜெண்டரி ரைடர்ஸ் மலேசியா கிளப், அப்பள்ளி நூலகத்துக்கு 2 குளிரூட்டிகளை வழங்கியது
இந்த குளிரூட்டிகளை வாங்குவதற்கு சிங்கப்பூர் லெஜண்டரி ரைடர்ஸ் தலைவர் சதீஸ் நாராயசாமி நிதியுதவி செய்திருந்தார்.
லெஜண்டரி ரைடர்ஸ் கடைப்பிடிக்கும் ESG எனப்படும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் இவ்வுதவி வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி கணேசன் தனது உரையில் லெஜண்டரி ரைடர்ஸ் பள்ளிக்கு வழங்கி வரும் ஆதரவுக்கும் வணக்கம் மலேசியாவுக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்.