
சான் டியாகோ, மே 23 – சான் டியாகோ இராணுவ குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில், விமானத்தில் இருந்தவர்களில் சிலர் உயிழந்துள்ளதாகவும், தரையில் இருந்தவர்களுக்குப் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குளானவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் விபத்திற்கான காரணத்தையம் ஆராய்ந்து வருகின்றனர்.