Latestஇந்தியாஉலகம்

சிவகங்கையில் தினமும் மளிகைக் கடைக்கு வந்து வேண்டியதை சாப்பிட்டுச் செல்லும் மாடுகள்

சிவகங்கை, நவம்பர்-8, தமிழகத்தின் சிவகங்கையில் ஒவ்வொரு நாள் காலையிலும் முதல் ஆளாக வந்து மளிகைக் கடையில் மாடுகள் சாப்பிட்டுச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

தினமும் கடை திறக்கும் வரை காத்திருக்கும் மாடுகள், உரிமையாளர் கதவைத் திறந்ததுமே கடைக்குள் நுழைந்து தங்களுக்கு வேண்டியத்தைச் சாப்பிடுகின்றன.

பிறகு எந்த பொருளையும் சேதப்படுத்தாமல் அவை போய் விடுவதாக மளிகைக் கடை உரிமையாளர் மாசிலாமணி கூறுகின்றார்.

ஒரு நாளில் இரண்டு மூன்று தடவை வந்துச் சென்றாலும், உரிமையாளரோ, கடைப் பணியார்களோ மாடுகளைத் தடுப்பதில்லை.

தன்னைப் பொருத்தவரை, சாட்சாத் அந்த திருமூர்த்தியே பசுமாடுகள் வடிவில் கடைக்கு வந்துச் செல்வதாக மாசிலாமணி மகிழ்வோடு கூறுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!