
உலு லங்காட், மே-14 – சிலாங்கூர் உலு லங்காட்டில் நேற்று மாலை வீசியப் புயல் காற்றில் 13 வீடுகளும் 4 கடைகளும் சேதமுற்றன.
மாலை 6 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறினர்.
Kampung Batu 16, Dusun Tua, Kampung Kenanga உள்ளிட்டவை புயலில் பாதிப்புற்றன.
10 மரங்களும் வேரோடு சாய்ந்தன; எனினும் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
வீடுகள் சேதமடைந்தவர்கள் தற்காலிகமாக அண்டை வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கைக் கணக்கிடப்பட்டு வருகிறது