Latestமலேசியா

37 பாகை செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் கெடா, பேராக் & கிளந்தான்

கோலாலம்பூர், ஜூன்-3 – 3 மாநிலங்களில் சில மாவட்டங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள வெப்பநிலை, முதல் கட்டமான ‘எச்சரிக்கை’ அளவில் உள்ளது.

அங்கு அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு 37 பாகை செல்சியஸாக பதிவாகியதாக, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia கூறியது.

கெடாவில் பண்டார் பஹாரு, பேராக்கில் லாருட் & மாத்தாங், குவாலா கங்சார், பேராக் தெங்கா மற்றும் கிளந்தானில் மாச்சாங், குவாலா கிராய் ஆகியவையே பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இவ்வேளையில், சபா, சரவாக் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் தினசரி வெப்பநிலை 35 பாகை செல்சியஸுக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, நீடித்த வெப்பக் காலக் கட்டத்தில் உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொளுத்தும் வெயிலில் உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் நிழலில் அல்லது குளிரூட்டப்பட்ட பகுதிகளில் தங்குவது ஆகியவை இதில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!