செனாவாங்கில் பள்ளியில் மயங்கி விழுந்து 10 வயது மாணவன் மரணம்

சிரம்பான், அக்டோபர்-2 – சிரம்பான், செனாவாங்கில் நேற்று மதியம் பேச்சு மூச்சின்றி கிடந்த 10 வயது மாணவன் பின்னர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நண்பகல் 12.10 மணியளவில் வகுப்பறையிலிருந்து வெளியேறியவன், பள்ளி வளாகத்தில் சுயநினைவின்றி விழுந்துகிடந்தான்.
ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிந்து அவன் உடனடியாக மருத்துவமனையின் சேர்க்கப்பட்டான்.
எனினும் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் போலீஸின் விசாரணைக்கே விடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
எனவே யாரும் யூகங்களை எழுப்பி விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
இதே நெகிரி செம்பிலான் லெங்கேங்கில் பள்ளி வளாகத்தில் சரியாக மூடப்படாத கழிவு நீர் குழியில் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்த அடுத்த சிலை நாட்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.