Latestமலேசியா

ஜம்மு – காஷ்மீரில் கொடூர முகத்தைக் காட்டிய பயங்கரவாதிகள்; அப்பாவி மக்களின் மரண ஓலம்

ஸ்ரீ நகர், ஏப்ரல்-23, இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் சுற்றுப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைச் செய்துள்ள சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்திற்கு, தடைச் செய்யப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான TRF கிளர்ச்சிப் படை பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் மரணமடைந்த அப்பாவி மக்களின் கதைகள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளன.

திருமணமாகி 7 நாட்களே ஆன கடற்படை அதிகாரி வினய் நர்வாலும் அவர்களில் ஒருவராவார்.

கேராளா கொச்சியில் எல்லைக் காப்புப் பணியில் உள்ள 26 வயது அவ்விளைஞர், ஏப்ரல் 16-ஆம் தேதி திருமணம் முடித்து தேனிலவுக்காக காஷ்மீர் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவரின் குடும்பத்தார் குறிப்பாக மனைவியை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்ணொருவர், தன் கண்ணெதிரிலேயே கணவரின் தலையில் சூடு பட்ட பயங்கர அனுபவத்தை விவரித்தார்.

அவரின் கணவரோடு எழுவர் சூடுபட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

பயங்கரவாதிகள், குழந்தைகளோடு இருந்த கணவன் – மனைவிகளில், கணவன்களை மட்டும் குறி வைத்தும் சுட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அப்படி கணவரை இழந்த பல்லவி எனும் மாது, நூலிழையில் உயிர் தப்பினார்.

கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தை கொன்றதை போலவே தங்களையும் கொன்று விடுமாறு, பல்லவியும் அவரின் 18 வயது மகனும் ஒரு தாக்குதல்காரனிடம் கெஞ்சியிருக்கின்றனர்.

எனினும் அவர்களை ஒன்றும் செய்யாத அவன், “ஏற்கனவே பல பெண்களை சுட்டு விட்டேன்; நீ பிழைத்துப் போ; போய் உன் பிரதமர் மோடியிடம் இதை சொல்” என பேசியுள்ளான்.

ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதிச் செய்துகொள்ள, கீழாடை உருவி பார்த்து விட்டு சுன்றுகொன்றதாகவும் உயிர் தப்பிய சிலர் விவரித்தனர்.

பயங்கரவாதிகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும், இம்முறை காஷ்மீரில் அவர்கள் நடத்தியுள்ள கோரத் தாண்டவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் அப்பாவி மக்களின் உயிர் பலி போயிருப்பது பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது.

சுற்றுலாத்தலத்தில் ஒலிக்கும் மரண ஓலத்திற்கு நியாயம் கிடைக்குமென உலக மக்களே எதிர்பார்க்கின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!