Latestமலேசியா

62 இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளைக் கடத்திச் செல்லும் முயற்சி சிலாங்கூரில் முறியடிப்பு

கோலாலம்பூர், நவம்பர்-9, கள்ளக்குடியேறிகளைக் கடல் மார்க்கமாக அண்டை நாடுகளுக்குக் கடத்திச் சென்று கொள்ளை இலாபம் பெற்று வந்த Gang Castelo சட்டவிரோத கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் தஞ்சோங் காராங் மற்றும் ரவாங்கில் அண்மையில் புக்கிட் அமான் போலீஸ் மேற்கொண்ட Op Pintas சோதனை நடவடிக்கையில் அக்கும்பல் சிக்கியது.

முதலில், சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய 2 படகுகளைச் சோதனையிட்ட போது குட்டு அம்பலமானது.

சிறார்கள் உட்பட மொத்தமாக 62 இந்தோனீசியக் கள்ளக் குடியேறிகள் அதில் கைதாகினர்.

அவர்களைக் கொண்டு சென்று விடுபவர், transit இடைமாற்ற வீட்டை நிர்வகிப்பர் ஆகிய இரு இந்தோனீசியர்களும் விசாரணைக்குக் கைதாகினர்.

ஒவ்வொரு கள்ளக் குடியேறியும் இந்நாட்டிலிருந்து வெளியேற, இந்தோனேசியா முகவர்களிடம் 1,500 முதல் 2,300 ரிங்கிட் வரையில் கட்டணம் செலுத்தியுள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!