
பூச்சோங், மே-28 – சிலாங்கூர், பூச்சோங், தாமான் பூச்சோங் பெர்டானாவில் நேற்று மாலை பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் 6 வாகனங்கள் சேதமடைந்தன.
அதில் Toyota Avanza காரில் ஓர் இந்தோனேசிய மாதுவும், அவரின் 2 வயது மகனும் சிக்கிக் கொண்டனர்.
பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வந்து சேருவதற்குள், அங்கிருந்த பொது மக்கள் அவ்விருவரையும் பாதுகாப்பாக காரிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
தாய் – மகன் இருவருக்கும் நல்ல வேளையாகக் காயமேதும் ஏற்படவில்லை.
சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய தீயணைப்பு – மீட்புப் படை, Perodua Aruz, Perodua Myvi, Proton Wira, Proton Waja, Toyota Avanza மற்றும் 1 டன் லாரி என 6 வாகனங்களை மீட்டது.