Latestமலேசியா

சிறப்பு தள்ளுபடி கொடுத்தும், 20 விழுக்காட்டினர் மட்டுமே சம்மன்கள் செலுத்தியுள்ளனர்

கோலாலும்பூர், ஜூன் 6- கடந்த ஜனவரி தொடங்கி நேற்று வரை வழங்கப்பட்ட சிறப்பு தள்ளுபடி விலையில் (Flat Rate), மொத்தம் 374,024 சம்மன்கள் செலுத்தப்பட்டு, 56 மில்லியன் ரிங்கிட் வசூலை பதிவு செய்துள்ளன.

இது, மொத்த சம்மன்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 20 சதவீத சம்மன்கள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாகவும், வசூல் குறைவாக இருப்பதாகவும் சாலை போக்குவரத்து துறையின் மூத்த இயக்குனர் முஹம்மது கிஃப்லி மா ஹாசன் (Muhammad Kifli Ma Hassan )தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சலுகை காலம் முடிவதற்குள் தங்கள் சம்மன்களை செலுத்தவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சலுகை காலம் முடிந்ததும், சம்மன் விகிதம் அசல் நிலைக்குத் திரும்பும் என்பதையும் பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்x2

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!