Latestமலேசியா

பினாங்கில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதோடு மிரட்டும் கார் ஓட்டுனர் காணொளி வைரலானது

கெப்பளா பத்தாஸ், டிச 9 –  பினாங்கில் தாசேக் குளுகோரில் உள்ள எண்ணெய் நிலையத்தில் மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதோடு அவருக்கு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுனரை போலீசார் அடையாளம் கண்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து புகார் பெற்றுள்ளதாக வட செபராங் பெராய் போலீஸ் நிலையத்தின் தலைவர் முகமட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார். புரோட்டோன் வீரா கார் ஓட்டுனர் மோதியதால் தமது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தமது புகாரில் தெரிவித்தார். சிக்னல் விளக்கை போடாமல் கார் ஓட்டுனர் தமது காரை வளைத்ததால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அவரை திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தமது காரினால் மோதியதோடு இரும்பு ஒன்றை தூக்கிக்கொண்டு தாக்க வந்துள்ளார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளோட்டி தாம் தொலைபேசியில் அச்சம்பவத்தை பதிவு செய்வதாக கூறியதை தொடர்ந்து கார் ஓட்டுனர் தமது காரில் அமர்கிறார். இது தொடர்பான 27 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்திலும் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!