
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-19- மேன்மை தங்கிய இடைக்கால ஜோகூர் சுல்தான் பட்டது இளவரசர் Tunku Ismail , ஜோகூர் ராஜா மூடா Tunku Iskandar Tunku Ismail ஆகியோர் பகடி வதையால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் Izzul islam Azuan Isaidi டியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அவர்களுடன் KPJ Puteri நிபுணத்துவ மருத்துவமனைக்கு ஜோகூர் மந்திரிபெசார் Dato’ Onn Hafiz Ghazi, ஜோகூர் மாநில அரசாங்க செயலாளர் Dato’ Asman Shah Abd Rahman மற்றும் ஜோகூர் Darul Ta’zim காற்பந்து கிளப்பின் விளையாட்டாளர் Arif Aimanனும் உடன் சென்றனர்.
பகடி வதை பாதிப்பினால் அச்சிறுவன் மூளையில் ஏற்பட்ட அதிர்வினால் தினசரி வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளான்.
கல்வி நிலையங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த பகடிவதை முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் எனபதோடு உடடினயாக நடவடிக்கை அமலாக்கப்பட வேண்டும் என இடைக்கால சுல்தான் இஸ்மாயில் கேட்டுக்கொண்டார் .