
லங்காவி, மே 20 – இன்று, மசூரி சர்வதேச கண்காட்சி மைய வான்வெளியில், லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சி 2025-இன் தொடக்க விழா, மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான மூன்று F/A-18D ஹார்னெட் விமானங்கள் (Hornet aircraft), மற்றும் மூன்று சுகோய் SU-30MKM போர் விமானங்களின், வான்வழி காட்சி படைப்புகளோடு இனிதே துவங்கியது.
இவ்விழாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) தலைமை தாங்கினார். மேலும், அவருடன் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர் (Datuk Seri Muhammad Sanusi Md Nor), பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது கலீத் நோர்டின் (Datuk Seri Mohamed Khaled Nordin), துணை அமைச்சர்கள், மற்றும் மலேசிய ஆயுதப்படை தலைவர் (MAF) ஜெனரல் டத்தோ முகமது நிஜாம் ஜாஃபர் ஆகியோரும் கலந்துக் கொண்டை குறிப்பிடத்தக்கது.
மே 24, முடிவடையும் இந்த ஐந்து நாள் கண்காட்சி, மலேசிய நாட்டை, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையமாக மாற்றும் முக்கிய தளம் என்று பிரதமர் கருத்துரைத்துள்ளார்.
“இன்றைய கண்டுபிடிப்பு, நாளைய சாதனைகள்” என்ற கருப்பொருளில், இவ்வாண்டு தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.