
மலாக்கா, மே-23 – மலாக்கா, ஜாலான் பூங்கா ராயாவில் நகைக்கடையொன்றை கொள்ளையிட்ட 27 வயது ஆடவனை, பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர்.
நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக, மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் கிறிஸ்டபர் பத்திட் கூறினார்.
பின்னர் அவன் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான்.
அவனது உடலை பரிசோதித்ததில் 15.35 கிராம் எடையில் 5 தங்கச் சங்கிலிகள் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையிட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு சுத்தியலும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவன் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டிருக்கவில்லை.
பொது மக்கள் துரத்திப் பிடித்ததில் ஏற்பட்ட கை, கால் மற்றும் தலைக் காயத்திற்கு அவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
பிறகு மேல் விசாரணைக்காக, மலாக்கா தெங்கா போலீஸ் தலைமையக லாக்கப்புக்கு அனுப்பப்பட்டான்