Latestமலேசியா

பொந்தியானில் ஐஸ் கட்டிகளை நிரப்பிக் கொண்டிருந்த லாரி குடை சாய்ந்து 64 வயது பணியாளர் பலி

பொந்தியான், செப்டம்பர் -21 – ஜோகூர் பொந்தியான், Jeti Kukup Laut-டில் ஐஸ் கட்டி பொட்டலங்களை நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென குடை சாய்ந்து, ஐஸ் கட்டிகளை இறக்கும் பணியாளரான முதியவர் உடல் நசுங்கி மாண்டார்.

 

நேற்று காலை 7.15 மணியளவில் அந்த jeti-யின் காங்கிரீட் தரை திடீரென சரிந்ததால், லாரி கவிழ்ந்து அருகில் நின்றிருந்த அவ்வாடவர் மேலே விழுந்தது.

 

தீயணைப்பு – மீட்புத் துறையினர் சிறப்புக் கருவிகளைக் கொண்டு அவரை வெளியே எடுத்த போது, 64 வயது அம்முதியவரின் உயிர் பிரிந்திருந்தது.

 

விசாரணையில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படாததால், அச்சம்பவத்தை பொந்தியான் போலீஸ் திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!