
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் உள்ள மலாய்-முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறியதாகக் கூறப்படுவது தொடர்பில்,மே 24 ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஆட்சேப பேரணியை நடத்த மலாய் மற்றும் இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம், அவர்களின் உரிமைகள் குறைந்து வருவதாகக் கூறப்படும் சமூகத்தின் கவலைகளிலிருந்து உருவானது என்று கூட்டணிச் செயலகத் தலைவர் Syed Hassan Syed Ali தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்கு Madani அரசாங்கத்தின் சரியான திசை இல்லை என்பதால் பல்வேறு பிரச்னைகளும் மோசமடைந்து இன விவகாரங்களும் ஏற்படுகின்றன.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த போதிலும்,இனப் பிரச்னைகள் பரவலாகி வருவதால்,அரசாங்கத்தால் இந்த விவகாரத்தை கையாள முடியவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம் என அக்கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் 20,000 பங்கேற்பாளர்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்பதோடு இதுவரை,சுமார் 700 மலாய்-இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புக்கள் இப்பேரணியில் பங்கேற்பதற்கு உறுதிப்படுத்தியுள்ளதாக perkasaவின் தலைவருமான Syed Hassan இதற்கு முன் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
மேலும்,பேரணியின் போது மற்ற இனங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளும் எழுப்படும்.
இந்த பேரணியில் அரசியல் இல்லை,ஆனால் பங்கேற்க விரும்பும் எந்தவொரு அரசியல்வாதியும் சொந்தமாக வந்தால் மட்டுமே வரவேற்கப்படுவார்கள்.
அமைதியான முறையில் நடைபெறும் இந்த பேராணிக்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் Syed Hassan கேட்டுக்கொண்டார்.