
சுங்கைப்பூலோ, ஜூன் 11 – Bandar Sri Coalfiedld டில் உள்ள
Wesley மெதடிஸ்ட் பள்ளியின் சிற்றுண்டி நிலையத்தில் ஒரு மீட்டர் நீளமுள்ள விஷத்தன்மைக் கொண்ட கருப்பு நாகப்பாம்பு பிடிபட்டது. தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கண்ணி அல்லது பொறியை பயன்படுத்தி அந்த பாம்பை பிடித்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குநர் அகமட் முக்லில் மொக்தார் (Ahmad Mukhlis Mokhtar ) தெரிவித்தார். அந்தப் பாம்பு குப்பைத் தொட்டியின் அருகே சுருண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் பாம்பைப் பிடித்து 25 நிமிடங்களுக்குள் பள்ளி வளாகத்திலிருந்து அகற்றப்பட்டு அதன் இயற்கையான வாழ்விடத்திற்குள் விட்டதாக அமகட் முக்லிஸ் தெரிவித்தார்.
அவசர அழைப்பைத் தொடர்ந்து Batu Arang தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 ஐந்து பணியாளர்கள் அந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.