Latestமலேசியா

மலாய்க்காரர் அல்லாதோரின் உரிமைகளையும் நிலை நாட்டினால் PN-னில் உரிமைக் கட்சி இணையக்கூடும்; ராமசாமி சூசகம்

கிள்ளான், ஜூலை-1 – மலாய்க்காரர் அல்லாதோரின் உரிமைகளுக்காகவும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) குரல் கொடுக்கும் பட்சத்தில், அந்த எதிர்கட்சிக் கூட்டணியில் தாங்கள் இணையலாம் என, உள்ளூர் அரசியல் களத்திற்கு புது வரவான உரிமைக் கட்சி கோடி காட்டியுள்ளது.

அக்கட்சியின் இடைக்கால தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அவ்வாறுக் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் தவிர, வேறு எந்த கூட்டணியுடனும் ஒத்துழைக்க உரிமைக் கட்சி தயாராக இருப்பதாக, DAP முன்னாள் உறுப்பினருமான அவர் சொன்னார்.

தேர்தல் அரசியலில் ஈடுபடுவதே அரசியல் கட்சிகளுக்கு அழகு; உரிமைக் கட்சியும் அதில் விதி விலக்கல்ல.

எனவே நாங்களும் ஒரு கூட்டணியில் இணையலாம்; ஆனால், அது எந்த கூட்டணி என்பதை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது என்றார் அவர்.

PN-னில் இணையும் சாத்தியமும் உள்ளது; ஆனால் மலாய்க்காரர் அல்லாதோரின் அவலநிலைக்குத் தீர்வுக் காண்பதில் அக்கூட்டணியின் நிலைப்பாட்டைப் பொருத்தே அம்முடிவு அமையும் என ராமசாமி கூறினார்.

2023 நவம்பரில் ராமசாமி DAP-யில் இருந்து வெளியேறியதும் உதயமான இந்த உரிமைக் கட்சி, சங்கங்களின் பதிவிலாகாவிடம் (ROS) பதிவுக்கு விண்ணப்பித்து அரசியல் கட்சியென்ற அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!