
கோலாலம்பூர், ஏப் 25 – நகரின் வரலாற்று மையத்தை ஒரு படைப்பு மற்றும் கலாச்சார மாவட்டமாக புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாரிசன் கேஎல் முன்முயற்சியை இன்று தொடக்கிவைத்தார்.
Warisan KL: Warisan Ibu Kota Malaysia Madani என்று முறையாக அழைக்கப்படும் இந்த முயற்சி, கோலாலம்பூரின் வரலாற்று மையத்திலிருந்து படிப்படியாக வெளியேற்றப்படுவதற்கு பதிலளிக்கும் விதமாக, பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒத்துழைப்பின் உருவான சிந்தனை நகரமாகும்.
20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முயற்சியில், கோலாலம்பூரை உலகளாவிய படைப்பாற்றல் மையமாக மாற்ற வடிவமைக்கப்பட்ட 10 முதன்மைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
அவை தனித்துவமான மலேசியாவை உள்ளடக்கி நன்கு இணைக்கப்பட்டுள்ளன. டத்தாரான் மெர்டேக்கா பாரம்பரியப் பகுதி ,Carcosa Seri Negara , Merdeka 118 , Masjid Jamek Enclave , துன் அப்துல் ரசாக் நினைவகம் ஆகியவவை உட்பட பல இடங்களை இது உள்ளடக்கியுள்ளது.
வாரிசான் கேஎல் (கோலாலம்பூர் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார மாவட்டம் (கேஎல்சிசிடி)யின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 2019ஆம் ஆண்டு பெருந்திட்டத்தை அடிப்படையாக கொண்டு கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040 உடன் இணை க்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு புத்துயிரூட்டுவதே இதன் குறிக்கோள். மேலும் இணைப்பை மேம்படுத்துதல், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றின் தனித்துவமான கலாச்சார தன்மையை வலுப்படுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.