Latestமலேசியா

மின் வர்த்தக மோசடியில் சிக்கும் மலேசியர்கள் அதிகரிப்பு; மோசமாகும் நிலைமை

கோலாலம்பூர், ஏப் 18 -ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் 12,110 ஆக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10,715 ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மின் வர்த்தக மோசடி சம்பவங்கள் 19.8 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் இதற்கு முன்பு 2,116 மோசடி சம்பவங்களை ஒப்பிடுகையில் இவை 2,535 ஆக அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்பிரிவின் இடைக்கால இயக்குநர் டத்தோ ரொஹாய்மி முகமட் இசா ( Rohaimi Md Isa ) கூறினார்.

இதைத் தொடர்ந்து 5,214 தொலைத்தொடர்பு குற்றங்கள், இல்லாத கடன் மோசடி தொடர்பில் 1,404 சம்பவங்கள் 711 மின் நிதி மோசடிகள் , இல்லாத முதலீடுகள் தொடர்பான 2,026 சம்பவங்கள் மற்றும் 220 காதல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய மோசடி சம்பவங்கள் உயர்ந்ததற்கு ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தும் போக்கு மிகவும் பரவலாகி வருவதே காரணம், குறிப்பாக நோன்பு பெருநாளுக்கு முன்னதாக அதிகமான பயனர்கள் டிஜிட்டல் முறையில் பொருட்களை கொள்முதல் செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியும், AI செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் இந்த இணைய மோசாடி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் Rohaimi  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!