Latestமலேசியா

முதலீட்டு மோசடி திட்டத்தில் 109,500 ரிங்கிட் சேமிப்பை ஆடவர் இழந்தார்

கோலாத் திரெங்கானு, ஏப் 29 – ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் முதலீடு மோசடி திட்டத்தில் தனது சேமிப்பு தொகையான 109,500 ரிங்கிட்டை இழந்தார்.

57 வயதான அந்த நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியன்று தனது நண்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்த பங்கு முதலீடு திட்டத்தில் பணத்தை இழந்துள்ளதாக கோலா திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் ( Azli Mohd Noor) தெரிவித்தார்.

ஒரு ஆன்லைன் விற்பனை முகவரின் விளக்கத்தை கேட்ட பிறகு அந்த முதலீட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர் ஈர்க்கப்பட்டதோடு 150,000 மூலதன முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 18 விழுக்காடு லாப ஈவு மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் RM6,700 மதிப்புள்ள லாபத் தொகை வழங்கப்படும் என்றும் அந்த நபருக்கு உறுதியளிக்கப்பட்டது.

இதனை நம்பி அந்த ஆடவர் அதே நாளில் 150,000 ரிங்கிட்டை பட்டுவாடா செய்துள்ளார்.

மேலும் பணம் செலுத்தப்பட்ட பிறகு படிப்படியாக 40,500 ரிங்கிட் வருமானத்தையும் அவர் பெற்றுள்ளார்.

அதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி முதல் வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. தாம் ஏமாற்றப்பட்டதோடு மோசடிக்கு உள்ளானதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Azli Mohd Nor தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!