
புக்கிட் பிந்தாங், மே 19 – பிரபல மோட்டார் சைக்கிள் கிளப்பான Rising Bikers கடந்த நேற்று ஞாயிற்றுக் கிழமை புக்கிட் பிந்தாங் , ஜாலான் புடுவில் உள்ள மெக்னம் வளாகத்தில் ஒரு புதுவிதமான சந்திப்பை நடத்தியது.
வழக்கமாக, இயற்கை எழில் கொஞ்சும் நடைபயணங்கள் மற்றும் திறந்தவெளி சாலை சாகசங்களை செய்து வந்த இந்த கிளப், இம்முறை, அதிர்ஷ்ட குலுக்கல் நிறுவனமான மெக்னமின் பொது குலுக்கல் நடத்துமிடத்திற்கு வருகை மேற்கொண்டிருந்தது. இதில் அக்கிளப்பைச் சேர்ந்த 24 பேர் பங்கேற்றனர்.
மெக்னமின் பொது குலுக்கல் இடம் என்பது, அதிர்ஷ்ட குலுக்கலின் வெற்றியாளார்களை தேர்வு செய்யும் இடமாகும். பரிசு எண் எப்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறது,பரிசுத்தொகை போன்ற செயல்முறைகளும் அனைத்தும் பொதுமக்களின் முன்னிலையில் இடம்பெறும்.
இதனிடையே, இந்த புதிய அனுபவத்தை பெற்ற இந்த கிளப்பின் உறுப்பினர்கள்,
வெற்றியாளர்களுக்கு தகவல் அறிவிப்பதில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
அதோடு, மெக்னம் செயலி குறித்த விளக்கமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
குலுக்கல் முடிவுகளைச் சரிபார்த்தல், டிக்கெட்டுகளை வாங்குவது, அறிவிப்புகளைப் பெறவும், கணக்குகளை நிர்வகிப்பது, பயனர்கள் தங்கள் கொள்முதல் வரலாற்றை மதிப்பாய்வு செய்வது, தனிப்பட்ட தகவல்களை நிர்வகிப்பது என அனைத்து சேசைகளையும் கொண்டுள்ளது மெக்னம் செயலி.
இதனிடையே, உருவாக்கம் கண்டு 11 ஆண்டுகள்
ஆகியுள்ள இந்த Rising Bikers கிளப், மோட்டார் சைக்கிளோட்டுதையும் தாண்டி, சமூகத்துக்கும் தனது சேவைகளை செய்து வருகிறது.
வெறுமனே குழுவாக சேர்ந்து மோட்டார் ஓட்டினோம் என்றில்லாமல், பொறுப்பான மோட்டாரோட்டியாக எப்படி செயல்படுவது குறித்து கிளப்பின் இளைய தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.
அவர்களின் நடவடிக்கைகள்
ஓய்வு நேரத்திற்கு அப்பால், பள்ளி தொண்டு இயக்கங்கள் மற்றும் பல்வேறு சமூக முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.
மோட்டார் சைக்கிளோட்டும் எளிய ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த கிளப், இப்போது சற்று வளர்ந்து கோலாலம்பூர் மற்றும் பேராக்கில் 140 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.