Latestமலேசியா

ரொம்பினில் கோர சாலை விபத்து; 3 வயது குழந்தை உட்பட மூவர் பலி

ரொம்பின், ஆகஸ்ட்-25 – ரொம்பின், Bukit Serok அருகே Jalan Muadzam Shah – Bahau சாலையில் 2 வாகனங்கள் மோதிக் கொண்டதில், 3 வயது குழந்தை உட்பட மூவர் மரணமடைந்தனர்.

ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்தனர்.

நெகிரி செம்பிலான், பஹாவிலிருந்து 4 பெண்கள் மற்றும் 1 குழந்தையை ஏற்றிக் கொண்டு ஆடவர் ஓட்டிச் சென்ற கார் Muadzam Shah செல்லும் வழியில், எதிர் திசையில் வந்த 4 சக்கர வாகனத்துடன் மோதியது விசாரணையில் தெரிய வந்தது.

வாகனத்திற்குள் சிக்குண்டு ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

4 சக்கர வாகனத்தின் ஓட்டுநர் உட்பட மற்ற அறுவரும் சிகிச்சைக்காக Muadzam Shah மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 18 வயது பெண்ணும், 3 வயது பெண் குழந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமுற்றனர்.

சவப்பரிசோதனைக்காக குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டன.

அவர்களின் அடையாளங்கள் இன்னமும் விசாரணையில் இருப்பதாக ரொம்பின் போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!