Latestமலேசியா

லங்காவி தாசேக் டாயாங் புந்திங் ஏரியில் இந்தியப் பிரஜை மூழ்கி மரணம்

லங்காவி, மார்ச்-20 – கெடா, லங்காவி, தாசேக் டாயாங் புந்திங் ஏரியில் இந்தியப் பிரஜையான 55 வயது ஆடவர் நேற்று மூழ்கி மாண்டார்.

நண்பகல் 12 மணியளவில் அது குறித்து தகவல் கிடைத்ததாக, லாங்காவி தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.

விவேக் அஷோக் என அடையாளம் கூறப்பட்ட அந்நபரின் உடல், பிற்பகல் 2.30 மணி வாக்கில் மீட்கப்பட்டது.

மேல் நடவடிக்கைக்காக சடலம் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீர் சார்ந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக அந்நபர் அங்குச் சென்றிருக்கலாமென நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!