
கோலா நெராங், பிப் 18 – தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளதால் , பலர் தங்கக் கடைகளில் குவிந்து தங்களுடைய நகைகளை விரைவாகப் பணத்திற்கு ஈடாக விற்கின்றனர்.
கெடா மாநிலத்தில் உள்ள தங்கக் கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பயன்படுத்திய மற்றும் குடும்ப தலைமுறைகளாக இருந்துவரும் தங்கம் மற்றும் அடகுச் ரசீதுகளை விற்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
தனது வளாகத்தில் பிப்ரவரி 11 ஆம்தேதிவரை தங்கத்தின் விலை அதிகப்பட்டசமாக உள்ளது. இதன் விலை ஒரு கிராமிற்கு 400 ரிங்கிட்டும் வர்த்தகத்திற்கு ஒரு கிராமிற்கு 370 ரிங்கிட்டும், வாங்குவதற்கு ஒரு கிராம் 365 ரிங்கிட்டும் விற்கப்படுவதாக Tun Emas சின் நிர்வாக இயக்குநர், Ku Mohd Fkiri Hanif Ku Puteh தெரிவித்தார்.
அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், நோன்பு மாதம், வரவிருக்கும் பண்டிகைக் காலம் போன்ற அவசரத் தேவைகளுக்காகவும் பலர் தங்கத்தை விற்கிறார்கள் .
தற்போதைய தங்கத்தின் விலை உண்மையில் அதிகமாக இருப்பதோடு , இதற்கு முன் இந்த அளவு உயர்ந்ததில்லை.
மலேசியாவில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிரேமிற்கு 423 ரிங்கிட்டாகும்.
பணவீக்கக் கவலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற நிலையால் 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 9 விழுக்காடு உயர்ந்துள்ளது.
நாள்பட்ட நோய்கள் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக பலர் தங்க நகைகளை விற்கிறார்கள் என்று u Mohd சுட்டிக்காட்டினார்.