Latestமலேசியா

புக்கிட் தம்புன் டோல் சாவடியில் சண்டையிட்டு வைரலான 2 ஆடவர்கள்; பினாங்கு போலீஸ் விசாரணை

நிபோங் திபால், ஜூன்-1 – பினாங்கு, புக்கிட் தம்புன் டோல் சாவடியில் 2 ஆடவர்கள் சண்டையிட்டு அதன் வீடியோக்கள் வைரலாகியுள்ள நிலையில், போலீஸ் உடனடி விசாரணையில் இறங்கியுள்ளது.

அச்சம்பவம் குறித்து 2 புகார்கள் பெறப்பட்டதாக, செபராங் பிறை செலாத்தான் போலீஸ் தலைவர் Jay January Siowou கூறினார்.

சந்தேக நபர்களை போலீஸ் அடையாளம் கண்டு வருவதாக அவர் சொன்னார்.

டோல் சாவடியில் ஒரு கார், இன்னொரு காரின் பின்பகுதியை மோதியதே பிரச்சைக்கு மூலக்காரணம் என நம்பப்படுகிறது.

இதனால் முதலில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது என்றார் அவர்.

RFID பாதையில் தலையில் தொப்பியும் இடுப்பில் கையிலும் கட்டியிருந்த ஆடவர், கையில் ஆயுதத்தோடு மற்றோர் ஆடவரைத் தாக்க முயல்வது வைரலான வீடியோவில் தெரிந்தது.

மூன்றாமவர் ஒருவர் தலையிட்டு இருவரையும் பின்னர் விலக்கி விட்டார்.

அவ்விரு ஆடவர்களுக்கு இடையிலான சண்டை நடந்த விதம், குறிப்பாக கைலி கட்டியிருந்தவரின் ஆக்ரோஷமும், அவர் அதனை வெளிப்படுத்திய விதமும், தாக்குதலிலிருந்து தப்பிக்க மற்றோர் ஆடவர் குதிப்பதும் ‘memes’-களாள சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!