
பெய்ஜிங், ஏப்ரல்-14, வெற்றியாளர் பட்டத்தை வெல்வதில் நீடித்த வறட்சியை தேசியப் பூப்பந்து ஆடவர் இரட்டையரான ஏரன் ச்சியா – சோ வூய் யிக், ஒருவழியாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
சீனாவில் நடைபெற்ற ஆசியப் பூப்பந்துப் போட்டியில், உபசரணை நாட்டுப் போட்டியாளர்களை வீழ்த்தி அவர்கள் பட்டம் வென்றனர்.
உலகத் தர வரிசையில் 6-ஆமிடத்தில் உள்ள ஏரன் ச்சியா- யூய் யிக், 16-ஆவது இடத்திலுள்ள ச்சென் போயாங் – லியூ யீ இணையை 21-19, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தனர்.
அரங்கம் நிறைந்த உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய சீன ஜோடியை, மலேசிய இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 46 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்தது.
வெற்றியாளர் என்ற முறையில் 163,716 ரிங்கிட் பரிசுப் பணத்தையும், தங்கப் பதக்கத்தையும் அவர்கள் வென்றனர்.
இவ்வாண்டு இதற்கு முன் அனைத்துப் போட்டிகளிலும் பூர்வாங்கச் சுற்றோடு வெளியேறிய ஏரன் ச்சியா – யூய் யிக்கு, இந்த வெற்றியாளர் பட்டம் புதுத் தெம்பை கொடுத்துள்ளது.
அவர்கள் கடைசியாக பட்டம் வென்றது கடந்தாண்டு நவம்பர் ஆகும்.