Latestமலேசியா

தெங்கு சாஃவ்ருல் விவகாரத்தை விவேகமாகக் கையாளுங்கள்; தேசிய முன்னணிக்கு சரவணன் வலியுறுத்து

தாப்பா, ஜூன்-2 – அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆரில் இணைய டத்தோ ஸ்ரீ தெங்கு சாஃவ்ருல் தெங்கு அப்துல் அசிஸ் எடுத்துள்ள முடிவால் ஏற்படும் விளைவுகளை, தேசிய முன்னணி விவேகமான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.

தேசிய முன்னணி அளவில் அது கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென்றும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

இல்லையென்றால் கட்சித் தாவல் கலாச்சாரத்தை இது மீண்டும் தொடக்கி வைத்து விடுமென்றார் அவர்.

சாஃவ்ருல் அம்னோ உறுப்பினராக இருந்தாலும் இது அம்னோ சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல; மாறாக தேசிய முன்னணியையும் ஒட்டுமொத்தமாக உட்படுத்திய விஷயமாகும்.

தேசிய முன்னணி என்ற கூட்டணி அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருக்கிறார்கள்; மாறாக எந்தவொரு தனிப்பட்ட கட்சி சார்ந்தும் அல்ல என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பேராக் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன், ‘தாப்பா தமிழன்’ ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்பதின்மர் கால்பந்துப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

தெங்கு சாஃவ்ருல் விஷயத்தில் அம்னோ இன்னமும் ‘பெரிய அண்ணன்’ போன்றே நடந்துகொள்ளவதாக ம.இ.காவின் தேசிய வியூக இயக்குநர் டத்தோ ஆர். தினாளன் முன்னதாக சாடியிருந்தார்.

சாஃவ்ருல் விலகினாலும் அமைச்சரவையில் அம்னோவின் 7 முழு அமைச்சர் பதவிகள் நிலை நிறுத்தப்பட வேண்டு என அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்; இது உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாக தினாளன் சொன்னார்.

தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோ ஒன்றும் ஒற்றை உறுப்பினர் கிடையாது; ம.இ.கா, ம.சீ.ச என பிற கட்சிகளும் உள்ளன.

எனவே, எந்தவொர் அமைச்சர் பதவி நியமனமும் தேசிய முன்னணி மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என தினாளன் வலியுறுத்தியிருந்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!