Latestமலேசியா

வாகனங்களை ஏலத்தில் விட்டு 245,500 ரிங்கிட் வசூல் ஈட்டிய KL JPJ; Ducati மோட்டார் சைக்கிளுக்கு கிராக்கி

கோலாலம்பூர், மே-21 – சீல் வைக்கப்பட்ட 124 வாகனங்களை கோலாலாம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை பொது ஏலத்தின் கீழ் இன்று ஏலத்தில் விட்டது.

அவற்றில் 108 வாகனங்கள் இன்னமும் பயன்படுத்தக் கூடியவை, அவற்றுக்கு உரிமம் வழங்கலாம்;

எஞ்சியவற்றை, ஏலத்தில் எடுப்பவர்கள் பழைய இரும்பு சாமான்கள் கடையில் போடலாம் என அத்துறை கூறியது.

மொத்த வாகனங்களில் 105 மோட்டார் சைக்கிள்கள்; 13 கார்கள்; எஞ்சியவை லாரிகள் ஆகும்.

காலை 8.30 மணி தொடங்கி பிற்பகல் 1. 30 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 85 பேர் பங்கேற்றனர்.

அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனங்களில், 20,350 ரிங்கிட்டுக்கு எடுக்கப்பட்ட 2013-ஆம் ஆண்டு வெளியான Ducati மோட்டார் சைக்கிளும் அடங்கும்.

இன்றைய ஏலத்தில் மொத்தமாக 245,500 ரிங்கிட் வசூலானது; ஏல புத்தக விற்பனை வசூலான 8,500 ரிங்கிட்டும் அதிலடக்கம்.

ஆக உயரிய ஏலத் தொகை 27,000 ரிங்கிட்டாகும்; ஆகக் குறைவு என்றால், அழிக்கப்படவிருக்கும் வாகனத்துக்கான 200 ரிங்கிட்டாகும்.

வாகனங்களின் ஆயுட்காலம் ஏலத்திற்கான தகுதியை நிர்ணயிப்பதில்லை, மாறாக நீதிமன்றத்தின் பறிமுதல் செயல்முறையைப் பொறுத்தே அது அமையுமென JPJ விளக்கியது.

பல்வேறு இரகங்களில் ஆன வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன; சில வாகனங்கள் 20 ஆண்டுகள் ஆனவை என்றும் அது குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!