Latestமலேசியா

காஜாங்கில் சாலை அடாவடி; 17 வயது மாணவரின் மூக்கை உடைத்த ஆடவன் கைது

காஜாங், மார்ச்-15 -சிலாங்கூர், காஜாங், சவ்ஜானா இம்பியானில் சாலையில் அடாவடி செய்து இடைநிலைப் பள்ளி மாணவரைத் தாக்கிய ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணி வாக்கில் இரு வாகனமோட்டிகளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது காரிலிருந்து இறங்கி வந்த சந்தேக நபர், அந்த 17 வயது மாணவரை சரமாரியாக முகத்தில் குத்தியுள்ளார்.

இதனால் மூக்கு எலும்பு உடைந்து இரத்தம் கொட்டியது.

பின்னர் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அம்மாணவர் அது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

சம்பவ வீடியோவும் வைரலான நிலையில் சுற்றுலா முகவர் நிறுவனத்தின் ஆலோசகருமான 39 வயது சந்தேக நபர் கைதானதாக காஜாங் போலீஸ் கூறியது.

பாதிக்கப்பட்ட மாணவருக்கு வாகனமோட்டும் உரிமம் இல்லாததால், அவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!