
கோலாலம்பூர், மே-21 – கோலாலம்பூர் மாநகர் மையத்தில் ஒரு பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 143 வெளிநாட்டவர்கள் கைதாகினர்.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய அச்சோதனைக்கு குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் Jafri Embol Taha தலைமையேற்றார்.
புத்ராஜெயா குடிநுழைவுத் தலைமையகத்தைச் சேர்ந்த 106 அமுலாக்க அதிகாரிகள் பலத்துடன், மொத்தம் 964 பேர் சோதனையிடப்பட்டனர்.
அதில் 22 முதல் 48 வயதிலான இந்தியப் பிரஜைகள், பாகிஸ்தானியர்கள், இந்தோனேசியர்கள், மியன்மார் நாட்டவர்கள், நேப்பாளிகள் உள்ளிட்டோர் கைதாகினர்.
முறையான அடையாள ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் காலம் தங்கியிருப்பது, பெர்மிட் நிபந்தனைகளை மீறியது, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளைபப் பயன்படுத்துவது ஆகியவை அவர்களின் குற்றமாகும்.
கைதான அனைவரும் மேல் விசாரணைக்காகக் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்