Latestமலேசியா

22 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வந்த ஜெர்மனியக் கடற்படைக் கப்பல்கள்

கிள்ளான், அக்டோபர்-16, ஜெர்மனியப் கடற்படைக் கப்பல்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா வந்துள்ளன.

FGS Baden Aden-Wurttemberg (F222) மற்றும் FGS Frankfurt Am Main (A1412) ஆகிய இரு போர் கப்பல்களும் நேற்று கிள்ளான் துறைமுகம் வந்தடைந்தன.

இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் மலேசியா வந்துள்ள அவ்விரு கப்பல்களையும், இசை வாத்தியங்களோடு மலேசியாவுக்கான ஜெர்மன் தூதர், மலேசியக் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அக்டோபர் 18 வரை அவை கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

இந்த 3 நாள் வருகையில், கப்பலுக்குள் விருந்தோம்பல், கப்பல் சுற்றுலா, விளையாட்டு நடவடிக்கைகள், TLDM அதிகாரிகளுடனான பயிற்சி குறித்த கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!