
கோலாலம்பூர், மே 29 – தனது மகளின் கடன், அந்நிய செலாவணியில் முதலீடு செய்வதாக ஏமாற்றப்பட்டு, அடைக்கப்பட்ட போதிலும், உரிமம் பெறாத வட்டி முதலைகள் எனப்படும் சட்டவிரோதமான கடன் வழங்கும் கும்பலிடமிருந்து மிரட்டல்களைப் பெற்ற ஒரு நபர் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார். 22 வயதான தனது மகள் லியாங் கடந்த மே மாதம், ஒரு அந்நிய செலாவணி முதலீட்டிற்கு பணம் செலுத்துவதற்காக 17 வட்டி முதலைகளிமிருந்து 20,000 ரிங்கிட் கடன் வாங்கியதாகவும், அது ஒரு மோசடியாக மாறியதாக பாதிக்கப்பட்ட CK என்பவர் தெரிவித்தார்.
அனைத்து கடன்களையும் அடைக்க அவரது குடும்பத்தினர் இறுதியில் 150,000 ரிங்கிட்டிற்கும் அதிகமாக செலுத்தியும் வட்டி முதலைகளின் தொல்லை மற்றும் துன்புறுத்தலுக்கு இன்னும் தீர்வு காண முடியாமல் தவித்து வருவதாக CK வேதனையோடு கூறினார்.
கடந்த மே 28ஆம் தேதியன்று , தனக்கும் தன் மனைவிக்கும் தெரியாத எண்ணிலிருந்து ஒரு மிரட்டல் செய்தி வந்தாகவும் , சாம் என்று கூறிக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு எங்கள் தகவல்கள், கார் எண், பழைய மற்றும் தற்போதைய வீட்டு முகவரி அனைத்தும் தெரிந்துள்ளது. எனது மகள் லியாங் இன்னும் 70,000 ரிங்கிட் கடன்பட்டிருப்பதாகவும், அது நிலுவையில் உள்ள வட்டிக்கான தொகை என்றும் , மூன்றாம் தரப்பினரை ஈடுபடுத்தாமல் அதே நாளில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்த நபர் வலியுறுத்தியதாக ம.சீ.ச பொது புகார் பிரிவு ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் CK தெரிவித்தார்.