Latestமலேசியா

இஸ்கண்டார் புத்ரியில் கோர விபத்து; 25 வயது இளைஞர் பலி!

இஸ்கண்டார் புத்ரி, மே 19- நேற்று, ஜாலான் ஜோகூர் பாரு-பொந்தியான் 24.1 கிலோமீட்டரில் மைவி வாகனத்திற்கும் (Perodua Myvi) மோட்டார் சைக்கிளுக்கும் ஏற்பட்ட விபத்தில் 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலியானார்.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கார் மோதியதால் சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்டு, அருகிலுள்ள ஆற்றில் விழுந்து மாண்டதாக, இஸ்கண்டார் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு (HSA) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட பின் அம்மோட்டார் ஓட்டுநர் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச்செய்துள்ளனர்.

தொடர்ந்து இந்த அபாயகரமான விபத்து குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போக்குவரத்து பிரிவை (Bahagian Trafik Daerah Iskandar Puteri) தொடர்புக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!