Latestமலேசியா

ஈப்போ, புக்கிட் கிளேடாங் மலையில் 71 வயது முதியவர் மயங்கி விழுந்து மரணம்

ஈப்போ, அக்டோபர்-21, ஈப்போ, புக்கிட் கிளேடாங் மலையில் ஏறிய போது 71 வயது முதியவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமடைந்தார்.

கடல் மட்டத்திற்கு மேல் 800 மீட்டர் உயரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மலையேறும் போது மிகவும் களைத்துப் போய், மூச்சுத் திணறிய அவ்வாடவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சம்பவ இடம் விரைந்த பாசீர் பூத்தே தீயணைப்பு – மீட்புப் படையினர் அவருக்கு முதலுதவி வழங்கினர்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்த மருத்துவக் குழு அம்முதியவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தது.

மீட்புக் குழுவினர் மலையிலிருந்து அவரின் உடலை தூக்கி வந்து மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!