
ஈப்போ, அக்டோபர்-22 – ஈப்போ, பண்டார் பாரு தம்புனில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் MPV வாகனத்துக்கு அடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
‘air lifting bag’ முறையில் MPV-க்கு அடியிலிருந்து 17 வயது மோட்டார் சைக்கிளோட்டியை தீயணைப்பு-மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.
எனினும் அங்கிருந்த மருத்துவக் குழு, அவ்விளைஞன் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தது.
விசாரணைக்காக, சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.