Latestமலேசியா

பத்து அன்னாமில் மோட்டார் சைக்கிள் இரைச்சலால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது

பத்து அன்னாம், நவம்பர்-2,

ஜோகூர், செகாமாட், பத்து அன்னாமில் மோட்டார் சைக்கிள் இரைச்சலால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் 30 வயது ஆடவர் கொல்லப்பட்டார்.

தீபாவளியன்று இரவு 9 மணியளவில் தாமான் செஜாத்தியில் ஆடவர்களும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், பாராங் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து அவ்வாடவர் உயிரிழந்தார்.

இதையடுத்து பதின்ம வயது முதல் 40 வயது வரையிலான 2 ஆண்களும் ஒரு பெண்ணும் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை கைதாகினர்.

அத்தாக்குதலில் ஈடுபடாத ஆனால், சந்தேக நபரின் வீட்டுக்கு வெளியே இருந்த வாகனங்களைச் சேதப்படுத்திய 3 ஆடவர்களும் கைதாகினர்.

சம்பவத்தின் போது, கொலையுண்ட நபரும் அவரின் நண்பர்களும் சந்தேக நபரின் வீட்டின் முன்புறத்தில் மோட்டார் சைக்கிளில் எண்ணெயை வேகமாகத் திருவியிருக்கின்றனர்.

இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி கடைசியில் கொலையில் முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!