Latestமலேசியா

நஜீப் வீட்டுக் காவல் குறித்த கூடுதல் உத்தரவு சட்டத்துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டது: மௌனம் கலைந்தார் பிரதமர்

கோலாலம்பூர், ஜனவரி-12, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு குறித்து முதன் முறையாகப் பிரதமர் முக்கியத் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும் 16-வது பேரரசரின் அவ்வுத்தரவு அடங்கிய கடிதம் தமக்கோ, அல்லது அரச மன்னிப்பு வாரிய உறுப்பினர்களின் கைகளுக்கோ கிடைக்கவில்லை;
மாறாக அப்போதைய தேசிய சட்டத் துறைத் தலைவருக்கு அது நேரடியாக அனுப்பப்பட்டதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஆனால் பேரரசர் மாறியதால், புதிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முடிவெடுக்க ஏதுவாக அக்கடிதத்தை சட்டத் துறைத் தலைவர் இஸ்தானா நெகாராவிடம் ஒப்படைத்து விட்டார்.

எனவே, அக்கூடுதல் உத்தரவுக் கடிதத்தை அரசாங்கம் மூடி மறைக்கவில்லை என பிரதமர் சொன்னார்.

அன்வார் குறிப்பிட்ட அந்தத் தேசிய சட்டத் துறைத் தலைவர் Ahmad Terrirudin Mohd ஆவார்; 2023 செப்டம்பர் முதல் கடந்தாண்டு நவம்பர் வரை அவர் அப்பதவியில் இருந்தார்.

SRC International ஊழல் வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

அவரும் காஜாங் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற கூட்டரசு பிரதேச அரச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், நஜீப்பின் சிறைத் தண்டனை ஆறாண்டுகளாகப் பாதியாகக் குறைக்கப்பட்டது;

அபராதத் தொகையும் 50  மில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைக்கப்பட்டது.

மறுநாளே அல் சுல்தான் அப்துல்லா 16-வது மாமன்னர் பதவிக் காலம் முடிந்து பஹாங் திரும்பினார்.

ஆனால், நஜீப் தனது எஞ்சிய சிறைக்காலத்தையும் வீட்டுக் காவலிலேயே கழிக்க அல் சுல்தான் அப்துல்லா கூடுதல் உத்தரவுப் பிறப்பித்ததாக இந்த ஓராண்டாகவே சர்ச்சை நீடித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!