
செப்பாங், ஜனவரி-17,போலீஸ் காலர் பேட்ஜ்கள் கொண்ட ஒரு ஜோடி மெய்க்காவலர் சீருடைகள் உட்பட, போலீஸ் உபகரணங்களை வைத்திருந்ததற்காக 35 வயது ஆடவருக்கு 50 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர், செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அந்நபர் ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி அந்த அபராதத்தை விதித்தார்.
1955 சிறு சிறு குற்றங்கள் சட்டத்தின் 16-ஆவது பிரிவின் கீழ் அத்தண்டனை விதிக்கப்பட்டதாக, செப்பாங் போலீஸ் துணைத் தலைவர் ஷான் கோபால் கிருஷ்ணன் கூறினார்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சம் 50 ரிங்கிட் அபராதமும், 6 வார சிறையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
பண்டார் பாரு சாலாக் திங்கி, கோத்தா வாரிசான், கிப்மால் சென்ட்ரல் அருகே ஜனவரி 12-ஆம் தேதி அவ்வாடவர் கைதானார்.
அவரின் காரை போலீஸார் சோதனையிட்ட போது மேற்கொண்ட போலீஸ் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன;
அவற்றை வைத்திருந்ததற்கான சரியான விளக்கம் அவரிடம் இல்லாதாதால் விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார்.