Latestமலேசியா

ஏப்ரல் 5ல் புக்கிட் ஜாலில் ஹாக்கி அரங்கை அதிர வைக்கப் போகும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை இரவு

கோலாலம்பூர், பிப்ரவரி-13 – கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் ஹாக்கி விளையாட்டரங்கம் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி இன்னிசை மழையால் நனையவுள்ளது.

ஆம், Raaja Rhapsody என்ற நேரடி இசை நிகழ்ச்சியின் வாயிலாக மலேசிய இரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் இசைஞானி இளையராஜா.

தமிழகத்தின் சென்னை மற்றும் ஹங்கேரி நாட்டின் புடாபேஸ்ட் நகரிலிருந்து 70 இசைக் கலைஞர்களுடன் அந்த மாபெரும் இசை விருந்தை அவர் படைக்கிறார்.

இசைத் துறையில் 50 ஆண்டுகளாக கோலோச்சும் இளையராஜா இசையில் இரவாப் புகழ் பெற்ற 40 பாடல்களுடன், திரையரங்களுகளில் இரசிகர்களைக் கட்டிப் போட்ட BGM எனப்படும் பின்னணி இசையால் புக்கிட் ஜாலில் ஹாக்கி அரங்கம் அதிரவிருக்கிறது.

அந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்புக்காக அண்மையில் இசைஞானி மலேசியா வந்திருந்தார்.

ஷா ஆலாம், TSR மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற அச்செய்தியாளர் சந்திப்பில், சட்ட விவகாரங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, Karyawan எனப்படும் மலேசியக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் Dato’ Freddie Fernandez, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான Pink Creative Agency நிறுவனத்தின் ரவிவர்மன் விக்ரமன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

அதன் போது, வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாக, இன்னிசை இரவில் பாடப்படவிருக்கும் அனைத்துப் பாடல்களின் முன்னோட்டம் போட்டுக் காட்டப்பட்டது.

தங்களின் அபிமான பாடல்கள் அப்பட்டியலில் இடம் பெற்றதை எண்ணி, செய்தியாளர் சந்திப்புக்கு வந்திருந்த ஊடகவியலாளர்களும், உள்ளூர் இரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.

இது வெறும் இசை நிகழ்ச்சியாக மட்டுமல்லாது, மலேசிய இரசிகர்களுக்கு மிகச் சிறந்த ஓர் அனுபவமாக இருக்குமென ஏற்பாட்டாளர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை www.myticket.asia இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வணக்கம் மலேசியாவும் இந்த Raaja Rhapsody இசை நிகழ்ச்சியின் ஊடக ஆதரவாளராகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!