
செப்பாங், ஏப்ரல்-24 – இன்று விடியற்காலையில் கோத்தா வாரிசானுக்கு அருகே கார் ஒன்று சாலையிலிருந்து சறுக்கி அருகேயிருந்த சாலையின் அடையாள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அக்காரை ஓட்டிய 25 வயது ஆடவர் உயிரிழந்தார். கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தை நோக்கிக் செல்லும் சாலையில் Bandar Serenia வில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவல் அறிந்து கே.எ.ஐ.ஏ விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த எழுவர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர்.
புரோடுவா மைவி கார் சாலையின் அருகேயிருந்த அடையாள கம்பத்தில் மோதியதைத் தொடர்ந்து அக்கார் ஓட்டுனர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவுக்கான துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் ( Ahmad Mukhlis Mokhtar ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.