Latestமலேசியா

Chegubard-டுக்கு எதிராக 1 மில்லியன் மானநட்ட வழக்குத் தொடுக்கும் ஸ்ரீ சஞ்சீவன்

கோலாலம்பூர், நவம்பர்-4 – அரசியல் ஆர்வலரான Chegubard எனப்படும் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின், சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில், பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்ட “#memeachadlam” எனும் நேரலை வீடியோவில் தம்மை அவதூறு செய்ததாகக் கூறி, Chegubard-டுக்கு வழக்கறிஞர் மூலம் சஞ்சீவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த ‘அவதூறு’ வீடியோக்கு சுமார் 65,000 பார்வைகள், 2,300 _likes_கள் மற்றும் 205 கருத்துகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இது சஞ்சீவனின் நற்பெயருக்கு கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் RM1 மில்லியன் இழப்பீடு தருவதுடன், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கவும் வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியான பதில் இல்லாவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!