பெய்ஜிங், ஜன 22 – சீனாவின் தென்மேற்கு மாநிலமாக யுன்னானில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் 44 பேர் உயிருடன் புதையுண்டனர். 18 வீடுகளைச் சேர்ந்த 44 பேர் புதையுண்டது தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக அரசாங்க தொலைக்காட்சியான CCTV தெரிவித்துள்ளது. இன்று விடியற்காலை மணி 5.51 அளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல்வேறு உதவி சாதனங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட அவசர பணியாளர்களின் ஒத்துழைப்புடன் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.