
இஸ்கந்தர் புத்ரி , டிச 3 – கடன் பெற்றவரின் வீட்டை எரிப்பதற்காக வட்டி முதலையிடம் 17 வயது பெண் பணம் பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. அப்பெண் வட்டி முதலைகளிடம் கூலிக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகளில் மூன்று முறை பெட்ரோல் குண்டு மற்றும் வர்ணக் கலவையை வீசி தேச துரோகம் செய்தாக சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என Iskandar Puteri மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் M. குமரேசன் தெரிவித்தார்.
நவம்பர் 27ஆம்தேதி கைது செய்யப்பட்ட அப்பெண் தாமான் புக்கிட் இண்டா (Taman Bukit Indah ) மற்றும் கங்கார் பூலாயில் (Kangkar Pulai) இரண்டு சம்பவங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் பெயிண்ட் வீசிய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
நவம்பர் 27 ஆம்தேதி ஸ்கூடாய் , Taman Damai Jaya வில் அதே தந்திரத்தை பயன்படுத்தி கடனை திரும்ப செலுத்ததாதவரின் வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீசியதை விசாரணையில் அந்த பெண் ஒப்புக் கொண்டதோடு வீடு அல்லது காரை எரிற்பதற்கு 1,000 ரிங்கிட்டும் , வீட்டில் வர்ணக் கலவையை ஊற்றுவதற்கு 600 ரிங்கிட்டையும் கூலியாக பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்ததாக குமரேசன் கூறினார்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்பத் செலுத்தத் தவறியவருக்கு தெரிவிக்கப்பட்ட மிரட்டல் குறிப்பில் காணப்பட்ட தொலைபேசி எண்கள் மூலம் அந்த வட்டி முதலைக் கும்பல் அண்டை நாடான சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தள்ளது என செய்தியாளர் கூட்டத்தில் குமார் கூறினார்.