
ஷா ஆலாம், மே-27 – வேப் அல்லது மின்னியல் விற்பனைக்குத் தடை விதிப்பதா இல்லையா என்பது வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் கூறியுள்ளார்.
சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் அதன் மீதான கொள்கை அறிக்கையை மாநில ஆட்சிக் குழுக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்த பின்னர், முடிவு எடுக்கப்படுமென, டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இவ்வாரம் அல்லது அடுத்த வாரத்தில் முடிவு வெளியாகலாம் என அவர் கோடி காட்டினார்.
எதுவானாலும் பொது மக்களின் சுகாதாரத்தை முன்னிறுத்தியே முடிவெடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
வேட் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருடனும் பேசி வருகிறோம்;
எடுக்கப்படும் முடிவு அவர்களையும் பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக அமிருடின் சொன்னார்.
ஜோகூர் மற்றும் கிளந்தான் மாநிலங்களைப் பின்பற்றி அண்மையில் திரங்கானு, பெர்லிஸ், கெடா மாநில அரசுகளும் வேப் விற்பனையைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.