Latestமலேசியா

கர்ப்பிணியை நீச்சல் குளத்தில் தள்ளிய ஆடவன் – பொங்கி எழும் நெட்டிசன்கள்

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஓர் ஆடவருக்கும் அடுக்குமாடியொன்றின் நீச்சல் குளம் அருகே நிகழும் வாக்குவாதமும், தள்ளு முள்ளும், வீடியோவில் பதிவாகி, அது நெட்டிசன்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
டிவிட்டர் பக்கத்தில் @adibhazlami என்பவர் பகிர்ந்த வீடியோவில், அக்கர்ப்பிணிப் பெண்ணை, அவருடன் இருந்த ஆடவர் சரமாரியாகக் தாக்குகிறார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், அவ்வாடவர், சற்றும் எதிர்பாராமல் அப்பெண்ணை தர தரவென இழுத்து நீச்சல் குளத்தினுள் தள்ளுவது, நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் இருக்கிறது.

நீச்சல் குளத்தில் தள்ளப்பட்ட அப்பெண் கைகளை மேலே உயர்த்தி உதவிக் கேட்பது போல் தெரிகிறது.
அச்சம்பவம் எங்கு நடந்தது என உறுதியாகத் தெரியாவிட்டாலும், மலேசியாவில் நடந்திருப்பது போல் தெரிகிறது என வீடியோவைப் பதிவேற்றியவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, “கர்ப்பிணிப் பெண்ணை அவன் நீரில் மூழ்கடிக்க முயலுகிறான், இது ஒரு கொலை முயற்சியே” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

வேதனைக்குரிய அவ்வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தையும், அளவில்லா கோபத்தையும் கொட்டித் தீர்ப்பதை அவர்களின் கருத்துகளில் பார்க்க முடிகிறது.

“ பொது வெளிக்கு வந்த குடும்ப வன்முறை இது, அவனை விடக் கூடாது, போலிஸ் கண்டிப்பாக அவனைக் கைதுச் செய்து உள்ளே தள்ள வேண்டும்” என பெரும்பாலோர் கருத்து பதிவுச் செய்திருக்கின்றனர்.

அச்சம்பவம் குறித்து காவல் துறையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!